யோவான் 9

John 9

பிறவியிலேயே பார்வையற்றவனை இயேசு குணமாக்குதல்

இயேசு நடந்துபோகையில், பிறந்ததிலிருந்தே பார்வைற்றவனாயிருந்த ஒருவனைக் கண்டார். அவருடைய சீடர்கள் அவரிடம், “போதகரே, இவன் பார்வையற்றவனாய் பிறந்தது யார் செய்த பாவத்தினால்? இவனுடைய பாவத்தினாலா? அல்லது இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலா?” என்று கேட்டார்கள். லூக் 13:2யோவா 9:34அப் 28:4யாத் 20:5மத் 16:14மத் 23:7

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இவனுடைய பாவத்தினாலோ, இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலோ அல்ல. இவனுடைய வாழ்க்கையில் இறைவனுடைய செயல்கள் வெளிப்படும்படியாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது. யோவா 11:4யோவா 11:40பிரச 9:1-2யோபு 2:3-6யோபு 42:7மத் 11:5அப் 4:21அப் 28:4 பகல் வேளையாய் இருக்கும்போதே, என்னை அனுப்பினவருடைய வேலையை நான் செய்யவேண்டும். இரவு வருகிறது, அப்பொழுது ஒருவராலும் வேலைசெய்யமுடியாது. யோவா 12:35எபே 5:16யோவா 4:34பிரச 9:10யோவா 11:9-10கலா 6:10யோவா 17:4கொலோ 4:5 நான் உலகத்தில் இருக்கையில், நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன்” என்றார். யோவா 8:12யோவா 12:46அப் 13:47யோவா 1:4-9அப் 26:18எபே 5:14ஏசா 42:6-7வெளி 21:23

இயேசு இவைகளைச் சொல்லியபின், தரையிலே துப்பி, உமிழ் நீரினால் சிறிதளவு சேறுண்டாக்கி, அவனுடைய கண்களிலே அதைப் பூசினார். மாற் 7:33மாற் 8:23வெளி 3:18 பின்பு இயேசு அவனிடம், “நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு” என்றார். சீலோவாம் என்பதன் அர்த்தம், “அனுப்பப்பட்டவன்” என்பதாகும். அவன் அப்படியே போய் கழுவி பார்வையடைந்து வீடு திரும்பினான். ஏசா 35:5யோவா 11:37யோவா 9:11அப் 26:18ஏசா 8:6சங் 146:8யாத் 4:11ஏசா 42:7

அவனுடைய அயலவரும், முன்பு அவன் பிச்சை கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டவர்களும், “இங்கே உட்கார்ந்திருந்து பிச்சை கேட்டவன் இவன் அல்லவா?” என்றார்கள். 1 சாமு 2:81 சாமு 21:11அப் 3:2-11லூக் 16:20-22லூக் 18:35மாற் 10:46ரூத் 1:19 சிலர், “இது அவன் தான்” என்றார்கள்.

இன்னும் சிலர், “இல்லை, இது அவனைப் போன்ற வேறொருவன்” என்றார்கள்.

ஆனால் அவனோ, “நான்தான் அவன்” என்றான்.

அப்பொழுது அவர்கள் அவனிடம், “அப்படியானால் உனக்கு எப்படி பார்வை கிடைத்தது?” என்றார்கள். பிரச 11:5மாற் 4:271 கொரி 15:35யோவா 3:9யோவா 9:15யோவா 9:21யோவா 9:26

அதற்கு அவன், “இயேசு என்று அழைக்கப்படும் ஒருவர் சிறிதளவு சேறுண்டாக்கி, அதை என் கண்களில் பூசி, சீலோவாம் குளத்தில் போய் கழுவும்படி எனக்குச் சொன்னார். அப்படியே நான் போய் கழுவியபோது, என்னால் பார்க்கமுடிந்தது” என்றான். யோவா 9:6-7யோவா 9:27எரே 36:17

அப்பொழுது அவர்கள் அவனிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். யாத் 2:18-20யோவா 5:11-13யோவா 7:11

அதற்கு அவன், “எனக்குத் தெரியாது” என்றான்.

பரிசேயர் குணமானதை விசாரித்தல்

பார்வையற்றவனாயிருந்தவனை மக்கள் பரிசேயரிடம் கொண்டுவந்தார்கள். யோவா 12:42யோவா 11:46-47யோவா 11:57யோவா 12:19யோவா 8:3-8 இயேசு சேறுண்டாக்கி, அந்த மனிதனின் கண்களைத் திறந்த நாள் ஒரு ஓய்வுநாளாயிருந்தது. யோவா 5:9லூக் 13:10-17மத் 12:1-14யோவா 5:16யோவா 7:21-23லூக் 14:1லூக் 6:1-11மாற் 2:23 எனவே பரிசேயரும் அவனிடம், “நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் எனது கண்களில் சேற்றைப் பூசினார். நான் அதைக் கழுவினேன். இப்பொழுது நான் பார்க்கிறேன்” என்றான். யோவா 9:10-11யோவா 9:26-27

அப்பொழுது பரிசேயரில் சிலர், “இவன் இறைவனிடமிருந்து வந்தவனல்ல. ஏனெனில் இவன் யூதரின் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவில்லையே” என்றார்கள். யோவா 10:19யோவா 7:43யோவா 3:2யோவா 7:12மத் 12:2யோவா 14:11யோவா 15:24யோவா 5:36

அதற்கு மற்றவர்கள், “பாவியான ஒருவனால் இப்படிப்பட்ட அடையாளங்களை எப்படிச் செய்யமுடியும்?” என்றார்கள். அதனால் அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது.

கடைசியாக அவர்கள் மீண்டும் அந்தக் பார்வையற்றவனைப் பார்த்து, “உனது கண்களைத் திறந்தவரைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்கள். அப் 3:22-26யோவா 4:19யோவா 6:14அப் 10:38அப் 2:22லூக் 24:19மத் 21:11

அதற்கு அவன், “அவர் ஒரு இறைவாக்கினர்” என்றான்.

பார்வையற்றவனாயிருந்தவனுடைய பெற்றோரைக் கூப்பிட்டு விசாரிக்கும் வரைக்கும், அவன் பார்வையற்றவனாய் இருந்து பார்வை பெற்றான் என்று யூதர்கள் நம்பவில்லை. எபி 3:15-19ஆதி 19:14எபி 4:11ஏசா 26:11ஏசா 53:1யோவா 1:19யோவா 12:37-40யோவா 5:44 அவர்கள் அவனுடைய பெற்றோரிடம், “பார்வையற்றவனாய்ப் பிறந்தான் என்று நீங்கள் சொன்ன உங்கள் மகன் இவன்தானா? இவன் எப்படி இப்பொழுது பார்வையடைந்தான்?” என்று கேட்டார்கள். அப் 4:14யோவா 9:8-9அப் 3:10

அதற்கு அவனுடைய பெற்றோர், “இவன் எங்கள் மகன் என்பதும், இவன் பார்வையற்றவனாய் பிறந்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால் இவனால் இப்பொழுது எப்படிப் பார்க்க முடிகிறது என்பதோ, இவனுடைய கண்களைத் திறந்தது யார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனையே கேளுங்கள். அவன் வயது வந்தவனாய் இருக்கிறானே; அவனே தனக்காகப் பேசுவான்” என்றார்கள். அவனுடைய பெற்றோர் யூதத்தலைவர்களுக்கு பயந்தபடியினாலேயே இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவை யாராவது கிறிஸ்து என அங்கீகரித்தால், அவன் ஜெப ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்கள். யோவா 16:2யோவா 7:13லூக் 6:22யோவா 12:42-43யோவா 9:34அப் 4:18அப் 5:13அப் 5:40 அதனாலேயே அவனுடைய பெற்றோர், “அவன் வயது வந்தவன்; அவனையே கேளுங்கள்” என்று சொன்னார்கள். யோவா 9:21

இரண்டாவது முறையும் அவர்கள் பார்வையற்றவனாயிருந்த அவனைக் கூப்பிட்டு, “நீ இறைவனுக்கு மகிமையைக் கொடு. அவன் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள். யோவா 9:16யோசு 7:19யோவா 8:492 கொரி 5:21யோவா 19:6சங் 50:14-151 சாமு 6:5-9ஏசா 66:5

அதற்கு பார்வையற்றவனாயிருந்தவன், “அவர் ஒரு பாவியோ இல்லையோ, எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்றுமட்டும் தெரியும். நான் பார்வையற்றவனாயிருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்!” என்றான். 1 யோவா 5:10யோவா 9:30யோவா 5:11

அப்பொழுது அவர்கள் அவனிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? அவன் எப்படி உன் கண்களைத் திறந்தான்?” என்று கேட்டார்கள்.

அவன் அதற்குப் பதிலாக, “ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை. மீண்டும் ஏன் அதைக் கேட்கிறீர்கள்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டான். லூக் 22:67யோவா 9:10-15

அப்பொழுது அவர்கள் ஆத்திரத்துடன் அவனை அவமதித்துப் பேசி, “நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயின் சீடர்கள். 1 கொரி 4:121 கொரி 6:10ரோம 2:171 பேது 2:23அப் 6:11-14ஏசா 51:7யோவா 5:45-47யோவா 7:19 மோசேயுடன் இறைவன் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இவனைப் பற்றியோ, இவன் எங்கிருந்து வந்தான் என்றோ எங்களுக்குத் தெரியாது” என்றார்கள். யோவா 8:141 இராஜா 22:272இராஜா 9:11அப் 22:22அப் 26:22அப் 7:35உபா 34:10எபி 3:2-5

அதற்கு அவன், “இது வியப்பாயிருக்கிறது! என் கண்களை அவரே திறந்தார். அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தார் என்று உங்களுக்குத் தெரியாது என்கிறீர்களே. சங் 119:18யோவா 12:37ஏசா 29:18ஏசா 29:14யோவா 3:102 கொரி 4:6ஏசா 35:5லூக் 7:22 இறைவன் பாவிகளுக்குச் செவிகொடுப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். தமது சித்தத்தைச் செய்கிற இறை பக்தியுள்ளவருக்கே அவர் செவிகொடுக்கிறார். நீதி 15:29ஏசா 1:15நீதி 28:9மீகா 3:4நீதி 1:28-29சங் 145:19சகரி 7:13சங் 34:15-16 பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. ஏசா 64:4யோபு 20:4லூக் 1:70வெளி 16:18 அவர் இறைவனிடமிருந்து வந்திராவிட்டால், அவரால் ஒன்றையுமே செய்திருக்க முடியாது” என்றான். யோவா 9:16யோவா 3:2அப் 5:38-39

அதற்கு அவர்கள், “பிறப்பிலேயே பாவத்தில் மூழ்கியிருந்த நீ எங்களுக்குப் போதிக்கத் துணிந்துவிட்டாயோ!” என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள். யோவா 9:2யோவா 9:22ஏசா 66:5ஆதி 19:9யோபு 25:4லூக் 18:17சங் 51:51 கொரி 5:13

ஆவிக்குரிய பார்வையற்றத் தன்மை

யூதத்தலைவர்கள் அவனை ஜெப ஆலயத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டார்கள் என்று இயேசு கேள்விப்பட்டார். இயேசு அவனைத் திரும்பவும் கண்டபோது, “நீ மானிடமகனை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். யோவா 20:311 யோவா 5:13ரோம 10:201 யோவா 4:15யோவா 10:361 யோவா 5:101 யோவா 5:201 யோவா 5:5

அதற்கு அவன், “ஐயா, அவர் யார் என்று சொல்லும். அப்பொழுது நான் அவரை விசுவாசிக்கிறேன்” என்றான். ரோம 10:14யோவா 1:38மத் 11:3நீதி 30:3-4உன்னத 5:9

அதற்கு இயேசு, “நீ அவரை இப்பொழுது பார்க்கிறாய்; உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற நானே அவர்” என்றார். யோவா 4:26யோவா 14:21-23யோவா 7:17சங் 25:14சங் 25:8-9மத் 11:25மத் 13:11-12அப் 10:31-33

அதற்கு அவன், “ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி, அவரை வழிபட்டான். மத் 14:33மத் 28:9யோவா 20:28லூக் 24:52மத் 28:17சங் 2:12சங் 45:11வெளி 5:9-14

அப்பொழுது இயேசு, “நியாயத்தீர்ப்பிற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். இதனால் பார்வையற்றவர்கள் காண்பார்கள். காண்கிறவர்கள் பார்வையற்றவராவார்கள்” என்றார். யோவா 3:19அப் 26:18யோவா 12:46யோவா 8:121 யோவா 2:11லூக் 4:18யோவா 12:40-41லூக் 1:79

அப்பொழுது இயேசுவுடன் இருந்த சில பரிசேயர்கள் இதைக் கேட்டு, “என்ன! நாங்களும் பார்வையற்றோர்களோ?” என்று கேட்டார்கள். வெளி 3:17மத் 15:12-14யோவா 7:47-52யோவா 9:34லூக் 11:39-54மத் 23:16-28ரோம 2:19-22

அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாயிருந்தால், பாவத்தின் குற்றம் உங்களுக்கு இராது; ஆனால் உங்களால் பார்க்கமுடியும் என்று நீங்கள் சொல்கிறபடியால், குற்றம் உங்கள்மேல் இருக்கிறது” என்றார். ஏசா 5:21யோவா 15:22-24லூக் 18:141 யோவா 1:8-10நீதி 26:12எபி 10:26எரே 2:35லூக் 12:47