நீதிமொழிகள் 30

Proverbs 30

ஆகூரின் வார்த்தைகள்

யாக்கேயின் மகன் ஆகூரினால் கூறப்பட்ட இறைவாக்கு. நீதி 31:12 பேது 1:19-21

அவன் ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்னது:

“இறைவனே, நான் சோர்ந்துவிட்டேன்,

ஆனால் நான் வெற்றிபெற முடியும்.

நான் ஒரு முட்டாள், ஒரு மனிதன் அல்ல; 1 கொரி 3:18சங் 73:22நீதி 5:121 கொரி 8:22 பேது 2:12-16ஏசா 6:5யாக் 1:5எரே 10:14

ஒரு மனிதனுக்குரிய அறிவாற்றல் எனக்கு இல்லை.

நான் ஞானத்தைக் கற்கவில்லை, எபே 3:18-19நீதி 9:10வெளி 3:7ரோம 11:33ஆமோ 7:14-15ஏசா 30:11ஏசா 57:15ஏசா 6:10

பரிசுத்தரைப் பற்றிய அறிவும் எனக்கில்லை.

மேலே வானத்திற்கு போய் கீழே இறங்கி வந்தவர் யார்? யோவா 3:13எபே 4:8-10யோபு 26:8உபா 30:12ஏசா 7:14ஏசா 9:6மத் 1:21-23ஏசா 40:12-31

தனது கைகளின் பிடிக்குள்ளே காற்றைச் சேர்த்துக்கொண்டவர் யார்?

வெள்ளத்தைத் தனது உடையில் சுற்றிக் கட்டியவர் யார்?

பூமியின் எல்லைகளை நிலைநாட்டியவர் யார்?

அவருடைய பெயர் என்ன, அவருடைய மகனின் பெயர் என்ன?

உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

“இறைவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் குறைபாடற்றது; சங் 18:30சங் 12:6யாக் 3:17சங் 3:3சங் 84:11சங் 119:140ஆதி 15:1சங் 91:2

அவரிடத்தில் அடைக்கலம் கொள்பவர்களுக்கு அவர் கேடயமானவர்.

அவருடைய வார்த்தைகளோடு நீ ஒன்றையும் கூட்டாதே, உபா 12:32உபா 4:2வெளி 22:18-19யோபு 13:7-91 கொரி 15:15

கூட்டினால் அவர் உன்னைக் கண்டித்து, பொய்யன் என நிரூபிப்பார்.

“யெகோவாவே, இரண்டு காரியங்களை நான் உம்மிடம் கேட்கிறேன்; லூக் 10:42சங் 27:42இராஜா 2:91 இராஜா 3:5-9சங் 21:2

நான் இறப்பதற்குள் அதை எனக்குத் தாரும்.

மாயையையும் பொய்களையும் என்னைவிட்டுத் தூரமாக்கும்; 1 தீமோ 6:6-8சங் 62:9-10சங் 119:37மத் 6:33லூக் 11:3சங் 119:29யோபு 23:12நீதி 21:6

எனக்கு வறுமையையோ, செல்வத்தையோ கொடுக்கவேண்டாம்,

ஆனால் அன்றன்றைக்குரிய உணவை மட்டும் எனக்குத் தாரும்.

இல்லாவிட்டால், நான் அளவுக்கதிகமாய் வைத்துக்கொண்டு ஓசி 13:6உபா 31:20எசேக் 16:49-50உபா 8:10-14உபா 32:15யோபு 31:24-28நெகே 9:25-26உபா 6:10-12

‘யெகோவா யார்?’ என்று கேட்டு ஒருவேளை உம்மை மறுதலிக்கக் கூடும்;

அல்லது நான் ஏழையாகி, திருடி

என் இறைவனுடைய பெயரை அவமானப்படுத்தக்கூடும்.

“வேலைக்காரர்களைப் பற்றி அவர்களுடைய எஜமானிடம் இழிவாகப் பேசாதே; பிரச 7:21ரோம 14:42 நாளாக 24:22-242 சாமு 19:26-27தானி 3:8-18தானி 6:13தானி 6:24நீதி 24:23-24

அப்படிப் பேசினால் அவர்கள் உன்னை சபிப்பார்கள், நீ குற்றவாளியாவாய்.

“தங்கள் தந்தையர்களை சபிக்கிறவர்களும், நீதி 20:20நீதி 30:17உபா 27:16யாத் 21:17நீதி 30:12-14லேவி 20:9உபா 21:20-211 தீமோ 5:4

தங்கள் தாய்மாரை ஆசீர்வதியாமல் இருக்கிறவர்களும் உண்டு;

தங்கள் அழுக்கிலிருந்து கழுவப்படாமலிருந்தும், லூக் 18:112 தீமோ 3:5நீதி 16:2எரே 2:351 யோவா 1:7-10நீதி 21:2தீத் 3:5எசேக் 36:25

தங்கள் கண்களுக்குத் தூய்மையாகக் காணப்படுகிறவர்களும் உண்டு;

எப்பொழுதும் கண்களில் பெருமையும் நீதி 6:17ஏசா 2:11சங் 101:5சங் 131:1தானி 11:36-37எசேக் 28:2-5எசேக் 28:9ஆப 2:4

ஆணவப் பார்வையையும் உடையவர்களும் உண்டு;

கூர்மையான வாள் போன்ற பற்களையும் சங் 57:4சங் 3:7சங் 14:4யோபு 29:17ஆமோ 8:4பிரச 4:1சங் 12:5சங் 58:6

தீட்டிய கத்திகள் போன்ற கீழ்வாய்ப் பற்களையும் உடையவர்களும் உண்டு;

அவர்கள் பூமியிலிருந்து ஏழைகளையும்,

மனுக்குலத்திலிருந்து எளியவர்களையும் தின்றுவிடுவார்கள்.

“இரத்தம் குடிக்கும் அட்டைக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். நீதி 30:21நீதி 30:29நீதி 6:16ரோம 16:182 பேது 2:13-152 பேது 2:3ஆமோ 1:11யோவா 8:39

அவர்கள், ‘தா! தா!’ என அழுகின்றனர்.

“ஒருபோதும் திருப்தியடையாத மூன்று காரியங்கள் உண்டு, இல்லை,

‘போதும்!’ என்று ஒருபோதும் சொல்லாத நான்காவது காரியமும் உண்டு:

பாதாளம், நீதி 27:20ஆப 2:5ஆதி 30:1

மலட்டுக் கருப்பை,

தண்ணீரால் திருப்தியடையாத நிலம்,

ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே.

“தன் தந்தையை ஏளனம் செய்து, உபா 21:18-21நீதி 23:22நீதி 30:112 சாமு 18:14-17லேவி 20:9ஆதி 9:21-27நீதி 20:201 சாமு 17:44

தாய்க்குக் கீழ்ப்படிவதைக் கேலி செய்கிறவனுடைய கண்களை

பள்ளத்தாக்கிலுள்ள அண்டங்காக்கைகள் கொத்திப் பிடுங்கும்,

கழுகுகள் அவற்றைத் தின்னும்.

“எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, யோபு 42:3சங் 139:6

நான்காவதையும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை:

ஆகாயத்திலே பறக்கும் கழுகின் வழியும், ஏசா 40:31யோபு 39:27யாத் 22:16

பாறையின்மேல் ஊரும் பாம்பின் வழியும்,

நடுக்கடலிலே கப்பலின் வழியும்,

இளம்பெண்ணின் அன்பை தேடிய ஒரு மனிதரின் வழியுமே அவை.

“ஒரு விபசாரியின் வழியும் இவ்விதமானதே: நீதி 5:6நீதி 7:13-23எண் 5:11-30

அவள் சாப்பிட்டுவிட்டு தன் வாயைத் துடைத்துக்கொண்டு,

‘நான் பிழையேதும் செய்யவில்லை’ என்கிறாள்.

“மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை,

நான்காவது காரியத்தையோ அதினால் தாங்க முடியவில்லை:

அரசனாகிவிடும் வேலைக்காரன், நீதி 19:10பிரச 10:71 சாமு 25:10-111 சாமு 25:251 சாமு 25:31 சாமு 25:36-381 சாமு 30:16ஏசா 3:4-5

மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும்,

யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண், நீதி 21:19நீதி 27:15நீதி 21:9நீதி 29:21நீதி 19:13

தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே.

“பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு, யோபு 12:7

ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை:

எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; நீதி 6:6-8

ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன;

குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே; சங் 104:18லேவி 11:5

ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன.

வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை, யாத் 10:4-6யோவே 1:6-7யோவே 2:25யோவே 2:7-11சங் 105:34யாத் 10:13-15யோவே 1:4வெளி 9:3-11

ஆனாலும் அவை ஒன்றாய் அணிவகுத்துச் செல்கின்றன;

பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம்,

ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது.

“வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை,

கம்பீரத் தோற்றமுடைய நான்காவதும் உண்டு:

மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை; நியாயாதி 14:18எண் 23:24

கர்வத்துடன் நடக்கும் சேவல், தானி 3:15-18நீதி 16:14நீதி 20:2

வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்;

தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே.

“நீ மூடத்தனமாய் நடந்து உன்னை நீயே மேன்மைப்படுத்தினால், யோபு 21:5யோபு 40:4மீகா 7:16-17நீதி 26:12ரோம 3:19பிரச 8:3-4நீதி 17:28

அல்லது தீமைசெய்ய திட்டமிட்டிருந்தால்,

உன் கையினால் உன் வாயை மூடிக்கொள்!

பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவதுபோலவும், நீதி 17:14நீதி 28:25நீதி 29:22நீதி 15:18நீதி 16:28நீதி 26:21

மூக்கைக் கசக்குவதினால் இரத்தம் வருவதுபோலவும்,

கோபத்தை மூட்டுவதும் சண்டையை ஏற்படுத்தும்.”