மதிக்கப்படாத தீர்க்கதரிசி
இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள். லூக் 4:16-30மத் 13:54-58மத் 2:23மத் 13:4 ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? யோவா 6:42யோவா 7:15மாற் 1:21-22அப் 4:13-14மத் 4:23லூக் 4:31-32லூக் 4:15மத் 7:28 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள். மத் 12:46மத் 13:55-57யோவா 6:42யூதா 1:1மத் 11:6கலா 1:19அப் 1:13மாற் 15:40 இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார். யோவா 4:44லூக் 4:24மத் 13:57எரே 12:6எரே 11:21 அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல். மத் 13:58மாற் 9:23மாற் 5:23எபி 4:2ஏசா 59:1-2ஆதி 19:22ஆதி 32:25
இயேசு பன்னிரண்டுபேரை அனுப்புதல்
அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார். மத் 9:35மத் 8:10லூக் 13:22அப் 10:38ஏசா 59:16எரே 2:11யோவா 9:30மத் 4:23 இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து, பிரச 4:9-10மத் 10:1-5லூக் 10:17-20லூக் 9:1-6லூக் 10:1லூக் 10:3-12லூக் 6:13-16வெளி 11:3 வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்; லூக் 9:3மத் 10:9-10லூக் 10:4லூக் 22:35 காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார். அப் 12:8எபே 6:15 பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள். லூக் 10:7-8லூக் 9:4மத் 10:11-13அப் 16:15அப் 17:5-7 யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். மத் 10:14-15அப் 18:6லூக் 10:10-15நெகே 5:13யூதா 1:7அப் 13:50-51எபி 10:26-31மத் 11:20-24 அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; மத் 4:17அப் 20:21லூக் 13:3அப் 11:18அப் 2:38எசேக் 18:30லூக் 11:32லூக் 24:47 அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள். யாக் 5:14-15லூக் 10:17மாற் 6:7
யோவான்ஸ்நானனின் தலை வெட்டப்படுதல்
இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான். லூக் 9:7-9மாற் 6:14-291 தெச 1:82 நாளாக 26:15லூக் 13:31லூக் 23:7-12லூக் 3:1மத் 14:1-12 சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள். மல்கி 4:5மத் 16:14மத் 21:11மாற் 8:28அப் 3:22-23யோவா 1:21யோவா 1:25யோவா 6:14
ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான். ஆதி 40:10-11லூக் 9:9மத் 14:2மத் 27:4சங் 53:5வெளி 11:10-13 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது, லூக் 3:19-20மத் 11:2லூக் 3:1மத் 4:12மத் 14:3-12 யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். லேவி 18:16லேவி 20:211 இராஜா 22:14எசேக் 3:18-19அப் 20:26-27அப் 24:24-26மத் 14:3-4 ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது. பிரச 7:9எபே 4:26-271 இராஜா 21:20ஆதி 39:17-20 ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான். மத் 21:26மத் 14:52 நாளாக 24:15-22யோவா 5:351 இராஜா 21:202 நாளாக 24:22 நாளாக 26:52இராஜா 13:14 ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது, எஸ்த 2:18ஆதி 40:201 பேது 4:32 சாமு 13:23-29அப் 12:2-4தானி 5:1-4எஸ்த 1:3-7எஸ்த 3:7 ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி; எஸ்த 1:10-12தானி 5:2மத் 14:6ஏசா 3:16-26 நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான். எஸ்த 5:3எஸ்த 7:2எஸ்த 5:6மத் 4:91 சாமு 28:102இராஜா 6:31நீதி 6:2மத் 14:7 அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். 2 நாளாக 22:3-4எசேக் 19:2-3ஆதி 27:8-11யோபு 31:31நீதி 27:3-4சங் 27:2சங் 37:12சங் 37:14 உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். எண் 7:13எண் 7:19-89நீதி 1:16ரோம 3:15 அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்; மத் 14:9மத் 27:24-25மத் 27:3-5 உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான். மத் 14:10-11 அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள். மத் 14:122 நாளாக 24:161 இராஜா 13:29-30அப் 8:2மத் 27:57-60
இயேசு ஐந்தாயிரம்பேரைப் போஷித்தல்
அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள். லூக் 9:10லூக் 10:17மத் 10:2அப் 20:18-21லூக் 22:14தீத் 2:6-7லூக் 17:5லூக் 24:10 அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது. மாற் 3:20யோவா 6:1மாற் 3:7மாற் 1:45மத் 14:13 அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள். மாற் 4:36மாற் 6:45மாற் 8:2-9யோவா 6:5-13மத் 14:13-21மாற் 3:9லூக் 9:10-17 அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள். யோவா 6:2மத் 15:29-31மாற் 6:54-55யாக் 1:19 இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார். மத் 9:36லூக் 9:11எண் 27:172 நாளாக 18:16எபி 4:15ஏசா 61:1-31 இராஜா 22:17எரே 50:6 அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது; யோவா 6:5-15லூக் 9:12-17மத் 14:15-21 சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். மத் 15:23மாற் 3:21மாற் 5:31மத் 16:22 அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள். 2இராஜா 4:42-44லூக் 9:13மத் 14:16மத் 15:32-33மாற் 8:2-3எண் 11:132இராஜா 7:2யோவா 6:4-10 அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள். மத் 15:34மாற் 8:5யோவா 6:9லூக் 9:13மத் 14:17-18 அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். 1 கொரி 14:331 கொரி 14:40மத் 15:351 இராஜா 10:5எஸ்த 1:5-6 அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். லூக் 9:14-15 அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார். மத் 14:19மாற் 7:34லூக் 24:30லூக் 9:161 கொரி 10:311 தீமோ 4:4-5யோவா 11:41மாற் 14:22 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள். லூக் 9:17மாற் 8:8-9யோவா 6:12மத் 14:20-21மத் 15:37-382இராஜா 4:42-44உபா 8:3சங் 145:15-16 மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். மாற் 8:19-20 அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
இயேசு கடலின்மேல் நடத்தல்
அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார். மத் 14:22-33யோவா 6:15-21மாற் 6:32மாற் 8:22லூக் 10:13மத் 11:21 அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். மாற் 1:35மத் 6:6லூக் 6:12மத் 14:231 பேது 2:21 மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார். யோவா 6:16-17மத் 14:23 அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார். யோபு 9:8லூக் 12:38லூக் 24:28மத் 14:24சங் 104:3சங் 93:4ஏசா 54:11யோவா 1:13 அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள். யோபு 9:8மத் 14:25-26லூக் 24:37யோபு 4:14-16 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி. மத் 14:27ஏசா 43:2யோவா 6:19-20லூக் 24:38-41யோவா 20:19-20 அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். மாற் 4:39சங் 93:3-4யோவா 6:21மாற் 7:37லூக் 8:24-25மத் 14:28-32மத் 8:26-27மாற் 1:27 அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள். லூக் 24:25மாற் 8:17-21ஏசா 63:17மாற் 16:14மத் 16:9-11மாற் 3:5மாற் 7:18ரோம 11:7 அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள். யோவா 6:24-25மத் 14:34-36லூக் 5:1 அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து, பிலி 3:10சங் 9:10 அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்; மத் 4:24மாற் 2:1-3மாற் 3:7-11 இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள். மத் 9:20லூக் 6:19எண் 15:38-39மாற் 3:10அப் 5:15மாற் 5:27-282இராஜா 13:21அப் 4:12