துன்பம் நிறைந்த இரவு
இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; 1 பேது 1:8உன்னத 1:7உன்னத 5:6ஏசா 26:9ஏசா 55:6சங் 130:1-2சங் 22:2உன்னத 5:8
தேடியும் நான் அவரைக் காணவில்லை.
நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி, எபே 5:14ரோம 13:111 கொரி 15:34ஏசா 64:7எரே 5:1யோவா 1:6லூக் 14:21-23மத் 26:40-41
என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்;
தேடியும் நான் அவரைக் காணவில்லை.
நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்: உன்னத 5:7எசேக் 33:2-9ஏசா 21:11-12ஏசா 21:6-8யோவா 20:15எசேக் 3:17எபி 13:17ஏசா 56:10
என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே, நீதி 8:17மத் 7:7நீதி 4:13உன்னத 6:12உன்னத 8:2ஏசா 45:19ஏசா 55:6-7எரே 29:13
என் ஆத்தும நேசரைக் கண்டேன்;
நான் அவரை என் தாயின் வீட்டிலும்,
என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடும்வரைக்கும் அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்.
எருசலேமின் இளம்பெண்களே! உன்னத 2:7உன்னத 8:4மீகா 4:8
எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை
நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி,
வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும்
உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
சாலோமொனின் வருகை
மணவாளி
வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் உன்னத 8:5வெளி 12:14உன்னத 1:13உன்னத 4:6உபா 8:2ஏசா 43:19எரே 2:2எரே 31:2
வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி,
தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்?
இதோ, சாலொமோனுடைய படுக்கை; 1 இராஜா 14:271 இராஜா 9:221 சாமு 14:521 சாமு 28:21 சாமு 8:162இராஜா 6:17எபி 1:14உன்னத 1:16
இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள்.
இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து, சங் 45:31 தெச 5:6-8எபே 6:16-18ஏசா 27:3நெகே 4:21-22சங் 149:5-9சங் 91:5
போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்;
இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது.
சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார். உன்னத 3:72 சாமு 23:5வெளி 14:6
அதின் தூண்களை வெள்ளியினாலும், 1 தீமோ 3:15-16எபே 3:18-19சங் 87:3வெளி 1:5வெளி 3:12ரோம 5:8உன்னத 1:5
அதின் தளத்தைப் பொன்னினாலும்,
அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்;
அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம்
நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது.
சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், ஏசா 62:5ஓசி 2:19-20எரே 2:2எபி 13:13மத் 12:42சங் 9:14வெளி 1:7செப்ப 3:17
ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும்,
மனமகிழ்ச்சியின் நாளிலும்,
அவருடைய தாயார் அவருக்கு
அணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள்.