சங்கீதங்கள் 149

Psalms 149
சங்கீதம் 149

யெகோவாவைத் துதியுங்கள் 1. சங் 33:3வெளி 5:9சங் 148:1எபி 2:12ஏசா 42:10சங் 98:1சங் 116:18சங் 144:9

யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள்,

பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள்.

இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; சங் 100:1-3சங் 95:6ஏசா 52:7ஏசா 54:5உபா 7:6-7யோவே 2:23யோபு 35:10லூக் 19:38

சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும்.

அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும், எரே 31:131 நாளாக 15:28-292 சாமு 6:142 சாமு 6:16யாத் 15:20சங் 81:2நியாயாதி 11:34சங் 150:3-5

தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும்.

ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; சங் 147:111 பேது 3:4சங் 35:27சங் 132:16செப்ப 3:17சங் 22:8சங் 117:2எரே 32:41

தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார்.

பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து யோபு 35:10சங் 42:81 பேது 1:8சங் 118:15சங் 145:10சங் 132:16சங் 23:1சங் 63:5-6

தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.

அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், எபி 4:12சங் 66:17வெளி 1:16வெளி 19:6நெகே 9:5சங் 96:4லூக் 2:14சங் 145:3-5

கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக.

அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும், சகரி 14:17-191 சாமு 15:2-3வெளி 19:11-211 சாமு 15:18-23நியாயாதி 5:23எண் 31:2-3சங் 137:8-9சகரி 9:13-16

மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும்,

அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும், நியாயாதி 1:6-7யோசு 10:23-24யோசு 12:7யோபு 36:8

அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும்,

அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை 1 கொரி 6:2-3சங் 148:14சங் 137:8உபா 32:42-43உபா 7:1-2எசேக் 28:26ஏசா 14:22-23வெளி 17:14-16

நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக.

இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை.

யெகோவாவைத் துதியுங்கள்.