இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, சங் 8:3ரோம 1:19-20சங் 50:6சங் 148:3-4சங் 33:6ஆதி 1:14-15சங் 150:1-2தானி 12:3
ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.
பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, சங் 74:16சங் 134:1-3ஆதி 1:17-18ஆதி 8:22சங் 24:7-10ஏசா 38:19சங் 136:8-9சங் 78:3-6
இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, உபா 4:19
அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், ரோம 10:18ஆதி 1:14-18மல்கி 4:2சங் 104:2சங் 98:32 கொரி 10:13-16ஏசா 49:6
அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன;
அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.
அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, ஏசா 62:5பிலி 3:13-14ஏசா 61:101 கொரி 9:24-26எபி 12:1-2பிரச 1:5யோவா 3:29
பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.
அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, பிரச 1:5யோபு 22:14கொலோ 1:23யோபு 25:3சங் 113:3சங் 139:9
அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது;
அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், சங் 119:130சங் 111:7கொலோ 3:16நீதி 1:4சங் 23:32 தீமோ 3:15-17சங் 119:105உபா 32:4
ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும்,
பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது.
யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், சங் 12:6சங் 119:105எரே 15:16நீதி 30:5நீதி 2:6சங் 119:128சங் 119:92சங் 119:80
இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது.
யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், 1 சாமு 12:24சங் 119:142சங் 119:137-138சங் 111:10சங் 119:1சங் 34:11-14சங் 115:13வெளி 15:3
என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும்,
அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.
அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், சங் 119:103சங் 119:72நீதி 16:16நீதி 3:13-15சங் 119:127யோபு 23:12நீதி 8:10-11நீதி 8:19
தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன.
அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; சங் 119:112 யோவா 1:8யாக் 1:25எபி 11:6-7நீதி 29:18மத் 6:4நீதி 6:22-23வெளி 14:13
அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? சங் 90:8சங் 139:23-24யோபு 6:24எரே 17:9சங் 40:121 கொரி 4:41 யோவா 1:7சங் 139:6
மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்.
துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; சங் 119:133ரோம 6:12-14சங் 7:101 சாமு 25:39அப் 24:16சங் 84:11உபா 17:12-13ஆதி 20:6
அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்;
அப்பொழுது நான் உத்தமனாகி,
பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன்.
என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, சங் 104:34சங் 51:15சங் 119:1081 பேது 2:5சங் 66:18-20நீதி 15:8சங் 18:1-2எபி 11:4
என் வாயின் வார்த்தைகளும்,
என் இருதயத்தின் தியானமும்,
உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.